Skip to main content

தலைக்கு ஏறிய தாகோன்

 



எவ்விதத்திலும் நம்மை மோசம்போக்கவேண்டும் என்ற சாத்தானின் தந்திரமே, JESUS என்று எழுதப்பட்டிருக்கும் மீன் வடிவ சாவிக்கொத்து. எகிப்திய, பெலிஸ்திய, கிரேக்க  மற்றும் ரோம மீன் வடிவ கடவுளுடன் இயேசுவை மறைமுகமாக ஒப்பிட்டும், உலகிற்கே தாய் (Mother God) என்று வணங்கப்படும் பாபிலோனிய பெண் தெய்வத்தை மீன் வடிவத்தால் அடையாளம் காட்டும் வண்ணமாகவும், நிலவு தெய்வமாகக் (Moon God) கருதப்பட்ட அதனை இரண்டு பிறைகள் பின்னிக் கிடப்பதைப் போன்றும் வடிவமைக்கப்பட்டு உலகினுள் நுழைக்கப்பட்டிருக்கும் இவ்வித அருவருப்புகளைக் கண்டு அகன்று செல்வதும், அகற்றிவிடுவதும் நம்முடைய கடமை.  வாகனத்தையும், வீட்டு வாசலையும், அலுவலகத்தையும் தாகோனைக் கொண்டே திறக்கிறீர்கள் என்ற திருட்டுத்தனமான திட்டத்திற்குத் துணைபோய்விடாதீர்  ஆலயத்தின் வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் மீன் வடிவத்தில் உருவாக்கப்படுவதும், ஆயர்களின் தொப்பிகள் வாயைத் திறந்த மீனைப் போல வடிவமைக்கப்படுவதும் இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியே. எய்ட்ஸ் பிரச்சாரத்திற்கும் இத்தகைய சின்னமே உபயோகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மீன்களை இணைத்து வைப்பதினாலேயே, காதலர்களுக்கு ஆர்ட்டின் சின்னம் வந்தது, அதனுடன் அம்பும் இருப்பது அருவருப்பு. அன்பை வெளிக்காட்டுவதற்காகவும், அன்பின் அடையாளமாகவும் கிறிஸ்தவர்களும் கூட இதனைப் பயன்படுத்துவது வேதனையானது. இத்தகைய சின்னமுடையவைகளை சாவிக்கொத்தை வாங்காமலும், உபயோகிக்காமலும் இருப்போம். ஆரோனின் தiலில் இருந்த தலைப்பாகை இத்தகையது அல்ல, இது பாபிலோனின் தரையிலிருந்து தலைக்கு ஏறியது.   









FISHES என்பதற்கான கிரேக்க வார்த்தைகளை இஷ்டத்திற்கு மாற்றி வைத்திருப்பதால் அது கிறிஸ்துவைக் குறிப்பிடாது.






Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க