முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சேர்ந்திருப்பதும், சார்ந்திருப்பதும்

கிறிஸ்துவில் அன்பான அண்ணனுக்கு, தம்பி எழுதுவது.  எனது நண்பனின் மூலமாக இரட்சிப்பில் வழிநடத்தப்பட்ட நான் எனது நண்பனோடு மற்றும் ஒரு குழுவோடு இணைந்து எனது பகுதியில் இப்போது ஊழியம் செய்துவருகிறேன். எனது நண்பன் உடன் வரும்போது, உற்சாகமாக எல்லா ஊழியங்களிலும் கலந்துகொள்ளுகிறேன்; ஆனால், தனியாக இருக்கும்போது சில வேளைகளில் சோர்ந்துபோய்விடுகின்றேன். ஏதாவது ஆலோசனை தர முடியுமா?  கிறிஸ்துவுக்குத் தூரமாக வாழ்ந்துகொண்டிருந்த உங்களை, கிறிஸ்துவின் பக்கமாக கவர்ந்திழுத்ததும், அவரை ஏற்றுக் கொள்ளவும் மற்றும் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் உதவியாயிருந்தது உங்களது நண்பனின் அன்றாட நடவடிக்கைகளும் மற்றும் சாட்சியுள்ள வாழ்க்கையுமே  என்று எழுதியிருந்தீர்கள்; மிகுந்த சந்தோஷம்! தங்கள் வாலிபத்தை வல்லவரின் விரல்களில் வளைத்துக் கொடுத்து,  மலைகளைப் பெயர்க்கும் பெலனோடு வாழும் இப்படிப்பட்ட நண்பர்களை உங்களுக்குத் தந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றேன்! பெயர்க்கக்கூடாத மலைகளைப் போன்ற அநேக வாலிபர்களை, கிறிஸ்துவின் பக்கம் பெயர்த்துக் கொண்டுவரும் பணிகளை இத்தகைய வாலிபர்கள் இன்னும் செய்யட்...
சமீபத்திய இடுகைகள்

குழு ஊழியம்

கிறிஸ்துவுக்குள் அன்பான அண்ணனுக்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். குழு ஊழியத்தைப் பற்றி கேள்வி பதிலில் பகுதியில் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன்; மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தற்பொழுது சக சகோதரர்களோடு இணைந்து, சிறுசிறு ஊழியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளேன். குழு ஊழியத்தில் நான் கடைபடிக்கவேண்டிய, அல்லது பின்பற்ற வேண்டிய பிற ஆலோசனைகள் ஏதாகிலும் உண்டா? கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனுக்கு, ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். உங்களது தொடர் உரையாடுதல்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். உங்களது கேள்வியை வாசித்ததும், உடனே என் இதயத்தில் தேவன் கொடுத்த சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். தேவன், உங்கள் வாழ்க்கைக்கு அவைகளை பயனுள்ளவைகளாக மாற்றித் தருவாராக. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும் . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான் ; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்ட...

ஊழிய அழைப்பைப் பெற்ற நான், அதில் முன்னேறிச் செல்வது எப்படி?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு,  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். சமீபத்தில் நடைபெற்ற ஒரு வாலிபர் கூடுகையில் ஊழிய அழைப்பினை நான் பெற்றிருக்கிறேன்; அதில் முன்னேறிச் செல்வது எப்படி?  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனுக்கு,  இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். கர்த்தருடைய ஊழியத்திற்கென்று, கர்த்தரால் நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைப்பு பெற்றமைக்காக ஆண்டவருக்கு நன்றியையும், அத்துடன் அத்துடன் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன். இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பினைப் பெற்று, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற அனைவரும் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களே! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் அருளும் இரட்சிப்பைப் பற்றியும் சக மனிதர்களுக்குச் சாட்சியாக அறிவிக்க வேண்டிய அழைப்பு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு; இதில் எவ்விதத் தளர்வும் விலக்கும் இல்லை. என்றபோதிலும், குறிப்பிட்ட சில பணிகளுக்காக, பிரத்தியேக...

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக...

சாம்பற் புதன்

சாம்பற் புதன் www.sinegithan.in 'லெந்து நாட்கள்' என்று அழைக்கப்படும் 40 நாட்கள், இயேசு கிறிஸ்து ரோமப் போர்ச்சேவகர்களால் பிடிக்கப்பட்ட, பாடுபடுத்தப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட, மரித்த நாட்களாகவும், அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிறு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாகவும் கிறிஸ்தவர்களால் சந்ததி சந்ததியாக ஆசரிக்கப்பட்டுவருகின்றன; இந்நாட்களின் தொடக்க நாளே 'சாம்பற் புதன்' என்று அழைக்கப்படுகின்றது. என்றபோதிலும், 'சாம்பற் புதன்' என்றால் என்ன? என்றும்,  அது எங்கே? எப்படி? யாரால் தொடங்கப்பட்டது? என்றும், 'லெந்து நாட்கள்' என்பது, ஏன் 40 நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன?' என்பதின் உண்மையை நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா!  'அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று' (மத். 4:1,2) என்று இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தொடக்கத்தை பரிசுத்த வேதம் எடுத்துக்கூறினாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளுக்கும், இந்த நாற்பது நாட்களுக்கும்...

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செ...

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         பிரியமானவர்களே!  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை'...