Skip to main content

ஜல்லிக்கட்டு தேவையா?

 




'ஜல்லிக்கட்டு' உலகளாவிய நிலையில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. ஒதுங்கி நிற்கவேண்டியவர்களும் கூட கூட்டத்தோடு கூட்டமாக ஒட்டி நிற்கும் அவலமான நிலை. விசுவாசிகளும், ஊழியர்களும், ஆவிக்குரிய தலைவர்கள் பலரும் கூட சத்துருவின் யுத்தத்தை அறிந்துகொள்ள இயலாமல், இசைந்து சத்தமிடும் சூழ்நிலை. வெறுக்கவேண்டியவைகளையெல்லாம் விருப்பத்திற்குள் வைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு கிறிஸ்தவர்களிலும்  பலர்    தங்களைத்    தள்ளிக்கொண்டது ஆவிக்குரிய உலகினை அசுசிப்படுத்தவே செய்கின்றது. தமிழன் என்ற உணர்வினால், ஆவிக்குரிய உயர்வை  அவித்துவிடக்கூடாது. ஏதோ ஒரு உணர்வைத் தூண்டிவிட்டு, ஆண்டவருடனான உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற சாத்தானின் எண்ணத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

ஆண்டவரை அறியாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆண்டவரை அறியாதவைகளாகவே வளர்க்கப்படுகின்றன. 'இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்' (சங். 51:5) என்று தாவீது எழுதுகிறான் தாவீது. தானியேல் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுசெல்லப்பட்டதைப் போலவே, நாமும் ஏதோ ஒரு நாட்டில் சிசுவாகப் பிறந்திருக்கிறோம்; 'கர்ப்பத்தின் கனியாகிய நாம் கர்த்தருடைய சுதந்திரம்' எனவே, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தில் உள்ள கலாச்சாரம் அனைத்தையும் நம்முடைய கலாச்சாரமாக்கிவிட முடியாது. உயிருள்ளவர்களென்று பெயர் பெற்றிருந்தும், செத்தவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து நிற்கக்கூடாது. 

கலாச்சாரம்  என்பதற்கெல்லாம்  நாம்  ஒத்துப்போகவேண்டுமென்றால், 'உடன்கட்டையை  ஒழித்தது  ஏன்?'  சுவிசேஷம்  அறிவிக்கப்பட்டதினால் காணாமற்போன இருளின் ஆதிக்கங்கள் அநேகம் உண்டு; பாரம்பரியங்கள் என்ற   போர்வையில் அவை பாதுகாக்கப்படக்கூடாதவை. பெண்கள் மேலாடை  அணிவதற்கு  தடை  செய்யப்பட்டிருந்தது  தமிழகத்தில்  இருந்த கலாச்சாரம்தானே,  நரபலி  கொடுப்பதும்,  கங்கையில்  விழுந்து  செத்தால் கைலாசம்  போய்விடுவோம்  என்று  நினைப்பதும்,  பிறந்த  குழந்தையை கங்கை நதியில் வீசிவிட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும் என்று நினைப்பதும், கோவில்களில் தேவதாசிகளை வைத்திருந்ததும் (விபச்சாரிகள்) இந்தியாவின் கலாச்சாரம்தான், இந்தியாவில் நாம்   பிறந்துவிட்டோம் என்பதற்காக இவை அத்தனையையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமோ? 

இராயனுடையதை இராயனுக்கும்,   தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் என்று சொன்னார் இயேசு; என்றபோதிலும், 'பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்' (எபே 6:1) என்ற கட்டளை கைவிடப்படக்கூடாதது. தமிழர்களின் கலாச்சாரம் என்று வாதிட்டால், இயேசுவையும் கைவிட்டுவிடத்தான் நேரிடும்; அறிவிக்கப்பட்டதினால்தானே அவரை  ஏற்றுக்கொண்டோம். அவரை  ஏற்றுக்கொண்டபின் தவறுகளைத் தக்கவைத்துக்கொள்ள  முயற்சிப்பது  தவறான  பாதையிலேயே  நம்மையும் பயணிக்கச் செய்யும்.  தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே நம் மூலமாய்த் தூஷிக்கப்படாதபடி (ரோம 2:18-24) நாம் கவனமாயிருக்கவேண்டுமே. 

ஆமான்  அகாஸ்வேரு  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  ராஜ்யத்தின்  சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய   வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும்  விகற்பமாயிருக்கிறது (எஸ்தர்  3:8)  என்கிறானே. அந்தந்த தேசங்களில் இருக்கிறவர்கள்,  அந்தந்த  தேசத்தின்  வழக்கப்படியும், கலாச்சாரத்தின்படியும் வாழ்ந்தாலும், வசனத்திற்கு  விரோதமானவைகள்  களையப்படவேண்டும்.  முன்னோர்களால்  பாரம்பரியமாய்  அநுசரித்துவந்த  வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் நாம் மீட்கப்படவில்லை (1பேது 1:18). கர்த்தருடைய பிள்ளைகள் எதிர்த்துவரும் களைகள்  எல்லாவற்றையும் அடக்கவேண்டும். 

எகிப்திலிருந்தபோது, எகிப்தின் பாரம்பரியத்தை கற்றுக்கொண்டதினாலேயே வழியில்  கன்றுகுட்டியைச்  செய்தார்கள்  இஸ்ரவேலர்கள்.  எகிப்திலிருந்து  கிளம்பினாலும், காளை அவர்களது இதயத்தில் களையாகவே இருந்தது. இன்று  அதனை  களைந்தெறியவேண்டிய  காலத்தில்  நாம்  இருக்கிறோம். 'விளையாட்டு என்ற பெயரில், காளையை உயர்த்துவதே ஜல்லிக்கட்டு'. பாலுறவையே முக்கியப்படுத்தும் 'PETA' என்ற அமைப்பும், ஜல்லிக்கட்டை தடை செய்வதைப் போல கூறி காளைகளையே உயர்த்திப் பிடிக்கிறது. வேதத்தின் வெளிச்சத்தில் இது களையே.





Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க