Skip to main content

காதலைப் பற்றிய கேள்விகள்

  



கீழே உள்ள கேள்விகள் அனைத்தும் நேரடியாகவும்கடிதங்கள் மூலமாகவும் என்னிடத்தில் வாலிபர்கள் கேட்டவைஅவர்கள் கேட்ட கேள்விகளும்அதற்கு நான் அளித்த பதில்களும் உங்களுக்கும் பதிலாகக்கூடும் என்ற நோக்கத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

1.நான் பார்த்த பெண்ணின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறதுஆனால் எனது பெற்றோர் அவளை ஏற்க மறுக்கின்றனர்,  என்ன செய்வது?

முழு நம்பிக்கை என்று எதைச் சொல்கிறாய் என எனக்குப் புரியவில்லைஅவள் மேல் உள்ள ஆசையினால் வருகின்ற வார்த்தைகள் இவைபெற்றோருடைய பந்தம் எல்லா சொந்தங்களைக் காட்டிலும் பிரதானமானதுமுக்கியமானது என்பதை அறிந்துகொள்உனக்கு மட்டுமல்ல நீ மணமுடிக்கும் பெண் உனது குடும்பத்துடன் இசைந்து வாழவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாதுதிருமணம் முடித்து பெற்றோரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்க்கை நடத்தும் (வேலையின் நிமித்தம் செல்வோரை அல்லபெற்றோரை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு போவோர்நிலை இன்று தேசமெங்கும் பெருகி வருகின்றதுஇதற்குக் காரணம்மணமுடித்த பெண் குடும்பத்துடன் ஒத்துப்போகாததேபெண்ணுக்காக பெற்றோரையே ஒதுக்கும் நிலை உருவாகிவிடுகின்றதுபெற்றோர் எந்த காரியத்தைக் காட்டி வேண்டாம் என்று சொல்லுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்அது சரியானது என்று அறிந்தால் அவர்களுக்கு கீழ்ப்படிவதுதானே நல்லதுஒரு பெண்ணுக்காக பெற்றோரை விலைகொடுப்பது நியாயமானதன்றுஎப்போதும் பெற்றோருடன் இணைந்துகொண்டால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்

வேதத்தில் ஏசா நாற்பது வயதானபோதுஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும்ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான்அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதியாகமம் 26: 34,35) என்று வாசிக்கின்றோம்பெற்றோரை மனமடிவாக்கும் குணமுடைய பெண் தேவையாஅவளால் ஒரு நாள் உனக்கும் மனமடிவு உண்டாகும்.  

2.முதன் முதல் ஒரு வாலிபன் தனது காதலை என்னிடம் வெளிக்காட்டும்போது நான் என்ன செய்யவேண்டும்?

விலகிச் செல்வதுதான் உகந்ததுவலையில் மாட்டிக்கொண்டு சேலையை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும். நீ அவனோடு ஏதாகிலும் சந்தர்ப்பங்களில் நெருங்கிப் பேசியிருந்தால் அவனுக்கு இந்த காதல் எண்ணம் வந்திருக்க வாய்ப்பு உண்டுஅவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட பின்னர் நீ அவனிடமிருந்து உன்தைதூரப்படுத்திக்கொள்நீ விலகிச் சென்றாலும் அவன் உன்னைத் தொடர்ந்து வந்தால் பெற்றோரிடமோபெரியவர்களிடமோ எடுத்துச் சொல்லி மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்கன்னியே நீ கண்ணாடி காதலிக்கும் வாலிபன் உன்னைத் துண்டாடவிடாதே

3.நான் ஒரு வாலிபனை சகோதரனாகத் தான் எண்ணிப் பழகினேன்ஆனால்அவன் இப்போது என்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்சகோதரனைப் போலப் பாவித்து பழகிய எனக்கு இது பெரிய அதிர்ச்சியாயிருக்கிறது

இத்தகைய நிலை இன்றைய நாட்களில் பலருக்கு உண்டாகின்றதுஉனது நிலையைக் குறித்து முதலில் நீ திட்டமாயிருக்கவேண்டும்நீ நண்பனாகத்தானே எண்ணி பழகியிருக்கின்றாய்எனவே நண்பனிடம் சொல்வதுபோலவே பொறுமையாய்மெதுவாய்நான் காதலிக்கும் நோக்கத்தோடு பழகவில்லைநீ என்றும் எனக்கு நண்பன்தான் என்று உனது நிலையை அவனு;ககுப் புரிய வைபுரிந்துகொண்டால் தொடரட்டும் நட்புஇல்லையென்றால் தொலை நிங்க அவன் எல்லைக்குள் நுழையாதிருப்பது உத்தமம்என்றபோதிலும்நண்பர்கள் பிரிவதால் உண்டாகும் வருத்தம் உனக்கும் உண்டாகும்அது நட்பினால் உண்டான வலிமைஅதனைத் தாங்கிக்கொண்டு மறந்துவிடும் தன்மை உனக்கு வரவேண்டும்என்னைப் பொறுத்தவரையில் எதிர்பாலரை நண்பர்களாகக் கொள்ளாதிருப்பது சாலச்சிறந்ததுமுற்றிலும் தவறு என்று சொல்லவில்லைஅதில் ஆபத்து அதிகம் என்பதை சுட்டிக்காட்டவே இப்படிச் சொல்கின்றேன்

4.ஒரு வாலிபனுடன் தவறான உடலுறவு கொண்டுவிட்டேன்இப்போது அதனை விட்டுவிட்டேன்தவறென்று எண்ணுகின்றேன்அதுபோன்ற காரியங்களை இனி செய்யமாட்டேன் என்று முடிவெடுத்துள்ளேன்ஆனாலும் எனது மனதில் அந்த வடு அவ்வப்போது வந்து என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறதுநான் என்ன செய்யவேண்டும்?

தவறு என்று நினைத்துவிட்டால்திருந்திவிட்டால் எந்த மனிதனுக்கும் மறுவாழ்வு உண்டு, கவலைப்படாதேவிழுந்ததையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிராமல்வரும் வாழ்க்கையை வடிவமைக்கப் பிரயாசப்படுவேதத்தில் உள்ள ஒரு வசனத்தை உனக்கு ஞாபகமூட்டுகின்றேன்நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் (எபிரேயர் 9:14). இயேசுவை அண்டிக்கொண்டால் அந்த மனநிலையிலிருந்து உங்களை விடுவிக்க அவர் போதுமானவர்அவர் மன்னித்ததையும்மறந்துவிட்டதையும் நீங்கள் நினைத்து நிளைத்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை

5.எனது காதலைக் குறித்து பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கிறதுஏதாவது வழி உண்டா?

பெற்றோரிடம் சொல்ல பயமாயிருக்கிறது என்று நினைத்து அவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய்விடாதிருங்கள்ஓடிப்போவது கோழையான முடிவுஉங்களது பெற்றோருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோஉங்கள் உறவினர்களில் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் மூலமாகவோ தெரிவிக்க முற்படலாம்உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் வரும் நபர் இறை பக்தி உள்ளவராயிருப்பாரென்றால் நலமாயிருக்கும்என்னைப் பொருத்தவரையில் பெற்றோருக்கு இடையே பேசுவதற்கு தரகர்கள் தேவையில்லைநல்ல நபர்கள் நடுவாக செயல்படுவார்களென்றால் அவர்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் சரியான ஆலோசனை கொடுக்கமுடியும்ஆனால்நடுவாக செயல்படும் அந்த நபரின் சரியான தீர்வுகளுக்கு கீழ்ப்படிய நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்

6.எனது காதலிக்கு மற்ற வாலிபனுடன் தொடர்பு இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகின்றேன்என்ன செய்வது?

உடனே காதலை மறந்துவிட்டுகாதலியை விட்டுவிடுவது நல்லது. காதலித்தால் காதலியை நம்பினால்தான் அது காதல்நம்பாவிட்டால் மோதல் நிச்சயம் உண்டாகும் எச்சரிக்கைசந்தேகம் என்ற வேர் உள்ளத்தில் உண்டாகிவிட்டால்அது வளர்ந்து வளர்ந்து வாழ்க்கையை நிச்சயம் அழித்துவிடும்உனக்கு சந்தேகம் உண்டானால் முதலில் உனது மனநிலையை சோதித்து அறிவது நல்லதுஎன்னை நேசிக்கும் நபர் யாரிடமும் பேசக்கூடாது என்ற மனநிலை இருந்தாலேயே இந்நிலை உண்டாகும்சாதாரணமாக யாரிடமும் பேசுவதைக் கூட மனம் சகித்துக்கொள்ளாதுஇந்த சந்தேகத்துடன் அவளை திருமணம் முடித்தால்நீ வெளியே செல்லும்போது வீட்டில் மனைவியை உள்ளே வைத்துவிட்டு வெளியே பூட்டிவிட்டுச் செல்லும் கீழ்த்தரமான நிலையைக் கூட நீ கையிலெடுக்கும் சூழல் உண்டாகும்

7.என்னைக் காதலித்தவன் திடீரென இப்பொழுது நீ வேண்டாம் என்று சொல்லுகின்றான்என்ன செய்வது?

எனது கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவன் காமத்திற்காக உன்னிடத்தில் பழகினவனாக இருக்கலாம்அப்படி நாங்கள் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று சொன்னால்அவனிடம் காரணத்தை அறிந்துகொள்ள முற்படலாம்நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்காவிட்டால்நம்பகமான நடுநிலை மனிதரின் துணையைத் தேடலாம்வீட்டில் எதிர்ப்புஜாதிமதம் போன்ற ஏதாவது பிரச்சனைகள் காதலனின் வீட்டில் உண்டாகி அதற்கு உனது காதலன் சம்மதித்து பெற்றோர் சொல்வது சரியே என்று நினைத்திருந்தால்விலகிக்கொள்வேறு வழி இல்லைநான் அவனைக் காதலித்தது ஊருக்கெல்லாம் தெரியுமே என்னை திருமணம் முடிக்க யார் வருவார் என்று நினைப்பதெல்லாம் மெல்ல மெல்ல மறைந்துபோகும்காதலில் தோற்றவளாக அல்ல மனந்திருந்தி நற்பெயரெடுக்க முற்படு.

8.என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்று என்னை  மிரட்டுகின்றான் என்ன வழி

இப்படிச் சொல்லும் சிலர் சாவதுண்டுசிலர் அப்படியாவது மிரட்டிப் பார்ப்போம் என்று காய் நகர்த்துவதுமுண்டுஉன் பக்கம் தவறு இல்லை என்றால் அந்த சாவுக்கு நீ  பொறுப்பல்ல, அது தற்கொலைநீ கொலையாளியாகமாட்டாய்அவனது வாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு அதுஅவன் செத்துவிடுவேன் என்று சொல்வதால் அவனைத் திருமணம் மடித்து நீ வாழ்க்கையில் செத்துவிடாதேஒருதலைக் காதல் கொள்ளும் வாலிபர்கள் இம்முறையைக் கையில் எடுப்பதுண்டுகாதலிக்கும்போதுபுகைப்படங்கள்கடிதங்கள் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தால்தான் பயம் உண்டாகும்இந்தக் காதலில் உனக்கு எந்த பங்கும் இல்லை என்றால் கவலைப்படாதே

9.காதலிக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் எனக்கு எனது காதலியின் ஞாபகமே வருகின்றதுபடிக்க முடியவில்லைஅவளைக் காணாவிட்டால் தலையே பித்துபிடித்ததுபோல இருக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள்நீ காதலிக்கவில்லை கன்னி என்னும கண்ணியில் மாட்டிக்கொண்டாய் என்பதை உனது வார்த்தைகளே வெளிப்படுத்துகின்றனஉன்னை நீயே விடுவித்துக்கொள் தண்ணீரின் கீழே ஆழமாய் மூழ்கிவிட்டு திரும்பி சுவாசிக்கக் கூட மேலே வர முடியாத நிலையைப் போல இருக்கிறது உனது நிலைநீ இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்அதற்காகச் செயல்படத் தொடங்குஉனது வாழ்க்கையின் இலட்சியம் உனது கண்களுக்கு முன் வரட்டும்அவளைச் சிறியதாக்கவேண்டும் என்றால்இறைவனை உனது வாழ்க்கையில் பெரியவராக மாற்றிக்கொள்இறைவனின் அன்பை நீ உணர்ந்துகொண்டால் அது எல்லாவற்றிற்கும் மருந்து

10.காதலிக்கும் நாங்கள் உடலுறவு கொள்ளவில்லைதொட்டுப் பழகுகிறோம்அவ்வப்போது முத்தங்களைப் பறிமாறிக்கொள்கின்றோம்இது தவறா?

உனது கேள்விக்கு ஒரே வார்த்தையில் தவறு என்று பதில் கொடுத்துவிடலாம்கண்பட்டு காதல் மலர்வதுண்டுகைபட்டு கற்பு அழிந்துபோவதுண்டுஅழிவை ஏன் ஆரம்பித்துவைக்கவேண்டும்நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருப்பது தவறுதான்,  எப்பொழுதுவேண்டுமென்றாலும் தீ பற்றிக்கொள்ளும் ஆபத்து உண்டு தூரமாயிருங்கள்கைகூடி வந்தால் திருமணத்திற்குப் பின்னர் கைகோர்த்துப் போகலாமே

11.காதல் தோற்றுப் போனதால் தற்கொலை செய்யும் உணர்வு எப்பொழுதும் எனது மனதில் உண்டாகின்றது என்ன செய்வது?

காதலையே நீ இன்னும் நினைத்துக்கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்து இது. காதலின் தோல்வியைக் குறித்து எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடுநல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கும் நண்பர்களுடன் உன்னை இணைத்தக்கொள்அவள் மட்டும்தான் உலகில் பெண் அல்லஇன்னும் கோடிகள் உண்டுகோழைத்தனமான முடிவு வேண்டாம்நீ இன்னும் வாழவேண்டிய வசந்தமான வாழ்க்கை ஏராளம் உண்டுஇந்த ஒன்றைக் காரணம் காட்டி அவை அனைத்தையும் அழித்துவிடாதேஇடறிய கல்லுக்காக ஏன் காலை வெட்டிக்கொள்ளவேண்டும்தற்கொலை உணர்வு மேலோங்கியே நின்றால்தேவ ஊழியர்களிடம் சென்று ஜெபித்து ஆலோசனை பெற்றுக்கொள்எது எப்படியானாலும்நீ உனது மனநிலையை மாற்றி இறைவனண்டை சேர்ந்தால் அத்தனையம் மாறிவிடும்,  கவலைப்படாதே

12.நான் காதலித்த பெண்ணை வேறொருவன் திருமணம் செய்துவிட்டான்அதனால் அவனை அழித்துவிடவேண்டும் அல்லது அந்த குடும்பத்தை இன்பமாக வாழவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் உண்டாகிறது என்ன செய்வது?

முடிந்துபோனவைகளை முடிச்சு போட்டு தொடர்வது சரியானதல்ல. நடந்தது நடந்ததுதான் நீ மறக்கக் கற்றுக்கொள்அவள் காதலியாக இன்னும் உனது நினைவில் இருந்தால்இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்அவர்களை வாழவிடுநீ வேறொரு வாழ்க்கையைத் தேடுஅவள் உனக்கு ஏதாவது ஞாபகப் பரிசுகளைவாழ்த்து அட்டைகளை அனுப்பியிருந்தால் அவைகளை இன்னமும் பத்தரப்படுத்தி வைத்திராமல் அவைகளை வீசிவிடுவது நல்லது

13.நான் காதலிக்கின்ற வாலிபனோடு ஒருமுறை உடலுறவு கொண்டேன்அதற்குப் பின்னர் அவன் என்னை நேசிக்காததைப் போலவே உணருகின்றேன்இது எனது மனதின் பிரம்மையாபயமாயிருக்கிறது?

கன்னியாக இருந்த நீ காலியாகிவிட்டாய் என்பதை முதலில் உனக்கு நினைப்பூட்ட விரும்புகின்றேன்கற்பு காலியாகிவிட்டதால் உனது மனதில் எழும் உணர்வுகளின் ஒரு பரிமாணம் தான் இந்த நிலைமேலும்இனிமேல் என்னை விட்டுவிடுவானோவேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளுவானோ என்ற பயம் உனது நெஞ்சில் நிறைந்திருந்தாலும் இந்த நிலை உருவாகும்உன்னைச் சுற்றி வந்தவனை நீ இனி அவனைச் சுற்றிவரும் நிலைக்கு உன்னைத் தள்ளிவிட்டாய்உடலைக் கொடுத்துவிட்டு புலம்புவதைக் காட்டிலும்ஞானமாய் விலகியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதல்லவாபூவில் தேன் அருந்திவிட்டு தேனீ பறந்து செல்வதுமுண்டுமீண்டும் தேடிவருவதுமுண்டுதேனை இழந்த மலர் நீ தேனீயைத் தேடிச் செல்வது இயலுமாமீண்டும் மீண்டும் உடலுறவுக்கு உன்னை அவன் அழைத்தால் அதற்கு விலகி இருந்து அவனது பாசத்தைத் தக்கவைத்துக்கொள்ப்பார்,  அதற்கு நீ விலகுவதால் அவன் பறந்து சென்றால் மறந்துவிடுகற்பை இழந்துவிட்டால் நீ கழித்துப்போடப்பட்டுவிடுவாய்எச்சில் இலையாய் நீ எறியப்படுவதைக் காட்டிலும்சரீரமாகிய உனது இலையில் கற்பாகிய சோற்ளை திருமணம் வரை காதலனுக்கு பரிமாறாமல் இருப்பது நல்லது

14.நான் காதலித்த வாலிபன் என்னை விட்டுவிட்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன் இது சரியா

உன்னைக் காதலித்த வாலிபன் அந்த முடிவை எடுக்காதபோதுநீ மட்டும் ஏன் இந்த முடிவை எடுக்கவேண்டும்வேறொருவனுடன் வாழுவதை என்னால் நினைத்தக்கூடப் பார்க்கமுடியவில்லை என்று சொல்லாதேநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கவும் தெரியவேண்டும்.

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க