Skip to main content

உடையா? தடையா?


 


வளர்ந்துகொண்டே செல்லும் இன்றையச் சமுதாயத்தில் குறைந்துகொண்டே செல்லும் உடைகளால் கேள்விக்குறிகளோடு நின்றுகொண்டிருக்கிறது அதற்கான விடை. 'ஆள் பாதி ஆடை பாதி' என்ற வழக்குமொழி மனிதனை பாதிக்குப் பாதியாகவே அடையாளம் காட்டிக்கொடுத்தபோதிலும், பாதியான ஆடையிலும்கூட பாதியை எடுத்துவிட்டு அரைநிர்வார்ணத்தையும் அங்கீகரித்துக்கொள்வது இன்றைய நாட்களில் வேதனையானது. நவநாகரீகம் (style) என்ற போர்வையில் வாழ விரும்பி, நிர்வாணிகளாவுமளவிற்கு உடையினை உதறிவருகிறது இன்றைய உலகு. இவைகளில் சிக்கிக்கொண்டோர், ஒழுக்கத்தைக் குறித்துப் பேசும்போது ஒத்துக்கொள்ளாமல் வாக்குவாதம் செய்வதையே தங்கள் வழக்கமாக்கிவிட்டனர்; மேட்டிமையான தங்களது விவாதத்தினால், தேவன் விரும்பும்  மனமாற்றத்தையோ பின்னுக்குத் தள்ளிவிடுகின்றனர். ஆலய ஆராதனை வேளையில்கூட, ஆராதனையின் ஒழுங்கு முறையினை கருத்தில் கொள்ளாமல், ஆடை, ஆபரங்களையே ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர்.  

'என் இஷ்டம்' என்ற வார்த்தை மற்றோர்க்கு கஷ்டத்தை உண்டாக்குமென்றால், அது நஷ்டக் கணக்கில் சேர்க்கப்படவேண்டியதே. 'தன்னைக் பார்க்க' என்ற நிலை மாறி, 'தன்னைப் படைத்தவர் பார்க்க' என்ற நிலைக்குத் தேறி நிற்போர்களை சத்துரு குறிவைத்துத் தாக்குவதோ கடினமானது. ஆனால், 'தன்னைக் காக்க' என்ற நிலை மாறி, 'தன்னைப் பார்க்க' என்ற நிலைக்குத் தவறி நிற்போர்களை சத்துரு குறிவைத்துத் தாக்குவது எளிதானது.  'புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ' (ஆதி. 3:11) என்று ஆதாமிடம் ஆண்டவர் கேட்டதுபோல, விலக்கிவைக்கப்பட்டிருக்கும் வலைகளில் நாம் ஒருபோதும் விழுந்துவிடக்கூடாது. மெல்ல மெல்ல சத்துரு உள்ளே நுழைக்கும் நூல்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாவிடில், அது போர்வையாக நெய்யப்பட்டு நம் வாழ்க்கையையே முழுவதும் மூடிவிடும். விலகியிருக்கவேண்டிய ஆபாசங்களுக்கும், கலைஞர்களுக்கும், சினிமாவுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இடங்கொடுத்து, சாட்சியாயிருக்கவேண்டிய உங்களை காட்சிப் பொருளாக மாற்றி அவன் ஆட்சிக்குள் வைத்துக்கொள்வதுதான் பிசாசின் வேலை. 

நிர்வாணத்தைக் கண்டு அறிவித்த கானானுக்குக் கிடைத்த சாபம் அத்தனை பெரிதாயிருக்குமென்றால் (ஆதி. 9:22), நிர்வாணமாயிருந்த தகப்பனுடைய பாவமும் பெரியதுதானே? விலகியிருக்கும் உங்கள் உடைகளால் வழியிலிருப்போரை சாபத்தைச் சம்பாதிக்கவைத்துவிடாதீர்கள். சேமும், யாப்பேத்தும் நிர்வாணத்தைக் காணக்கூடாது என்று பின்னிட்டு வந்ததுபோல (ஆதி.9:23), உங்களைக் காணும் மக்கள் உங்களைக் கடக்கும்போது பின்னிட்டு நடக்கச்செய்துவிடாதிருங்கள். மயிரைப் பின்னுவதைத்தான் 'அலங்காரம்' என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தனது நிருபத்தில் எழுதுகின்றார் (1 பேதுரு 3:2); ஆனால், இன்றைய நாட்களில் தலைவிரிக் கோலமாகவே தேவனை ஆராதிக்கும் பெண்கள் எத்தனை? எத்தனை? 

தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டபோது 'நான் நிர்வாணியாயிருக்கிறேன்' (ஆதி. 3:9,10) என்று உத்தரவு சொன்னதுபோல, ஆடைகளைப் பற்றிய விஷயத்தில் நாம் மெத்தனத்தோடு வாழக்கூடாது. எப்படியும் அணியலாம், எதையும் அணியலாம் என்ற தாறுமாறு தவறான வழிக்குள் நம்மை திசைதிருப்பிவிடும். இன்றைய நாட்களில் கடைகளில் விற்கப்படும் பல ஆடைகள் (விசேஷமாக பெண்களின் ஆடைகள்) நடிகைகளின் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றது. உடைகள் உடலின் அழகைக் கூட்டலாம்; ஆனால், கவர்ச்சி என்ற கட்டமோ களைந்தெறியப்படவேண்டியது. அழகைக் குறித்த எண்ணம் எல்லை தாண்டுமென்றால், அது கவர்ச்சியில்தான் போய் கவிழும் என்பது நிச்சயம். குழந்தைப் பருவத்திலே தங்கள் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்து கண்குளிரக் காணும் பெற்றோர்களும் உண்டு. அது பெற்றோரது ஆவிக்குரிய வாழ்க்கையையே பிள்ளைகளில் பிரதிபலிக்கிறது. இத்தகைய நோக்கோடு வியாபார யுக்தியுடன் விதவிதமான ஆடைகளை சந்தையில் அறிமுகப்படுத்தி தரமாக வாழவேண்டிய நம்மை தேவனே தகுதி நீக்கம் செய்யும் அளவிற்கு சத்துரு மாற்றிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். குறைந்துகொண்டேவரும் ஆடை அளவினால் பரிசுத்தத்திற்கு குலைச்சல் உண்டாக்கிவிடாதபடி கவனமாயிருப்போம்.  

ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும் பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக (யாத் 28:3) என்றார் கர்த்தர். இந்நாட்களில், இத்தகையோரை அடையாளம் கண்டுகொள்வது அரிதானாலும், உடைகளைத் தெரிந்தெடுக்கும் நாமாவது ஞானத்தின் ஆவியால் நிரம்பின விவேகமுள்ள இருதயமுள்ளவர்களாக செயல்பட்டால் மானத்தைக் காத்துக்கொள்ளலாம், அப்படி தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம் (2கொரி 5:3). 'ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்' (யாத். 32:25) என்று இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் போல, நம்மைக் குறித்து குறிப்பு எழுதப்பட்டுவிடக்கூடாது. இப்படிப்பட்ட நிலைக்கு வடிவமைப்பாளர்கள் உங்களை வழுக்கி விழச்செய்துவிடாதபடிக்கு எச்சரிக்கையோடிருங்கள். அவமானத்திற்கு விலகி வாழுங்கள். நம்மை நிர்வாணமாக்குவதும், நமது கண்களை நிர்வாணத்தை நோக்கியே திருப்புவதுமே சத்துருவின் நோக்கம் என்பதை உணர்ந்தவர்களாக, அவனது போக்கிற்கு எதிர்த்து நிற்போம். 

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் (மத் 18:6) என்ற வசனத்தின்படி, பிறர் இடறும் கல்லாக வழியில் நில்லாதபடி காத்துக்கொள்ளுங்கள். கன்மலையாகிய கிறிஸ்துவில் திடமாகவும், தரமாகவும் நீங்கள் வாழும்போது, ஓடிவந்து உங்கள் மீது மோதி நொறுங்கிப்போகும் மனிதர்களைக் குறித்து கவலைகொள்ளவேண்டாம்; இடறியவர்கள் நீங்கள் அல்ல அவர்களே என்பதை உங்கள் வாழ்க்கையே உலகிற்கும், உன்னதத்திற்கும் வெளிப்படுத்தும்.

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க