Skip to main content

யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா?

 



 கிறிஸ்மஸ் தாத்தா என்பது யார்? கிறிஸ்துவின் பிறப்பிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? கிறிஸ்து இல்லாமல் கொண்டாடிவிடுவார்கள், ஆனால் கிறிஸ்மஸ் தாத்தா இல்லாவிட்டால் திண்டாடிவிடுவார்கள் என்ற நிலை. உலக வழிகளின் மாயையான தோற்றங்களை மனதில் புகுத்தி, ஆவிக்குரிய வாழ்க்கையிலோ இறந்துபோனவர்களாகவே இயேசுவின் பிறந்தநாளை சரீரத்தில் கொண்டாடும் மக்கள் அநேகர். பிசாசின் தந்திரத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் கிறிஸ்மஸ் தாத்தாவே ஈர்த்துக்கொள்ளும்போது, இயேசுவுக்கு இடம் எங்கே? இயேசுவோ, அப்போஸ்தலர்களோ அவரது பிறந்தநாளைக் கொண்டாடியதாக வேதம் போதிக்கவில்லையே; அப்படியே கிறிஸ்மஸ் தாத்தா வேடமும் வேதத்தில் இல்லையே. சந்ததி சந்ததியாய் தொடர்வதுதானே என்பதற்காக, சத்துருவுக்குச் சாதகமாகிவிடலாமோ. உங்கள் பாரம்பரியங்களினாலே, கிறிஸ்துவின் கட்டளைகளை அவமாக்குகிறீர்கள் என்றாரே இயேசு. சில கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளில், 'தாத்தா எப்போ வந்தீங்க, பாட்டி எப்படி இருக்காங்க' போன்ற கிண்டலான கேள்விகள் கேட்கப்பட்டு, கூட்டங்களைக் கூத்தாடச் செய்வதும் பொருத்தமானதோ? ஜனங்களின் முகத்தை மறைமுகமாக தன்னை நோக்கித் திருப்புவதே சத்துருவின் நோக்கம். சாதகமாக ஒன்றைக் காட்டிவிட்டு, சத்தியத்தைக் காணாதபடி கண்களைக் கட்டிப்போடுவது பிசாசின் தந்திரம்; மேலும், உலகத்திற்கு ஒத்த வேஷத்தையும், 'உன்னுடைய வேஷந்தான்' என்று ஒத்துக்கொள்ளச் செய்துவிடுவான்; இதனையே இன்றைய நாட்களின் 'கிறிஸ்மஸ் தாத்தா' வேடங்கள் வெளிப்படுத்துகின்றன.

4-ம் நூற்றாண்டில், துருக்கியின் சிமிர்னாவில் பேராயராக இருந்தவர் Saint Nicholas பெரும் செல்வந்தராகவும் அத்துடன் குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் உதவிசெய்தவராகவும் இருந்ததால், ரோமன் கத்தோலிக்க அமைப்பினர் அவரை நினைவுகூருவதை வழக்கப்படுத்தினர். இங்கிலாந்து தேசத்தினர் அவரை ‘Father of Christmas” என்று அழைத்தனர். விளைவு, உலகத்தின் இரட்சகராக ஈவாகவும் பரிசாகவும் கொடுக்கப்பட்ட இயேசுவின் மீது இருந்த கவனத்தை, பரிசுகொடுக்கும் 'கிறிஸ்மஸ் தாத்தாவின்' மீது திருப்பிவிட்டனர். ஜனங்களின் விருப்பமும் புத்தாடை, பரிசு, பலகாரம் என்று மாறிப்போனது. ஆத்துமாவுக்கான பரிசை விட, சரீரத்துக்கான பரிசுகளே சிறப்பாகத் தெரிந்தது ஜனங்களுக்கு. இவரது இரக்க குணத்தை ஆண்டுதோறும் நினைவுறத் தொடங்கி, எதிரியும் கலந்துவிட்ட கிடங்கிற்குள் விழுந்துகிடப்பது பரிதாபமானது. 'புனிதர்' என்ற பட்டத்துடன், அவரையே புகழ்பாடத் தொடங்கினதினாலும், ஆராதனைக்குரியவராக அவரை மாற்றினதினாலும் அவரது உருவம் விக்கிரகமானது, தியானாளின் கோவில் மாதிரிகள் விற்கப்பட்டதுபோல (அப். 19:24) அவரைப் போன்ற தோற்றமுடைய வேடம் வியாபரமாக மாறிப்போனது. ஜனங்களின் பார்வை வேறுபக்கமாகத் திரும்பியபோது உள்ளே நுழைவதும், வேறு வழியில் மக்களைக் கூட்டிச் செல்வதும் எளிதாகிப்போனது பிசாசுக்கு. கிறிஸ்து பிறப்பினை மறந்து 'St. Nicholas day"  என்றே ஜனங்கள் கொண்டாடவும் தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க,  


'தோர்' (THOR)  என்ற ஜெர்மானிய கடவுளை, கொம்புகளுள்ள இரண்டு மான்கள் ஆகாயத்தில் தேரில் இழுத்துச் செல்வதைப் போன்று உருவகப்படுத்தப்பட்ட ஜெர்மானிய புராணங்கள் கூறும் கதையே, 'கிறிஸ்மஸ் தாத்தா' என்ற வடிவிலும், 'யூல்' (YULE) என்ற ஜெர்மானியர்களின் பண்டிகை கிறிஸ்மஸ் என்ற வடிவிலும் கிறிஸ்தவத்துடன் கலந்துவிட்டது கவலைக்குரியது. மான் கொம்புகளை வீட்டுச் சுவர்களில் அலங்காரமாக மாட்டிவைக்கும் வழக்கம் 'தோர்' என்ற தெய்வத்தை வணங்கியவர்களால் தொடங்கப்பட்டதே. நீண்ட தாடி, தொப்பி, அங்கி போன்றவைகளும், நிலவை நோக்கி ஆகாயத்தில் மான்கள் பாய்ந்து செல்லும் காட்சியும் பாபிலோனியர்கள் வணங்கிவந்த நிம்ரோத்தையும், நிலவு தெய்வத்தையும், தோர் என்ற தெய்வத்தையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டவைகளே. அத்துடன், பாபிலோனியர்களின் சூரியக் கடவுளின் பிறந்தநாளாகக் கருதப்படும் டிசம்பர் 25 ம் தேதியினையே கிறிஸ்து பிறப்பின் தினமாகவும் கொண்டாடும்படி கிறிஸ்தவம் பணிக்கப்பட்டது எத்தனை பெரிதான கலப்படம்.   

பிரியமானவர்களே! லாபானுடைய வீட்டை விட்டு யாக்கோபு ஓடிப்போகிறபோது, லாபான் யாக்கோபை நோக்கி: என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய்? என்று கேட்டதைப் போல, 'கிறிஸ்மஸ் தாத்தாவின் வௌ;வேறு உருவங்களையும் படங்களையும்' வைத்து கிறிஸ்து பிறப்பினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களிடமும் அந்நிய ஜனங்கள் இக்கேள்வியைக கேட்கும் காலம் தூரத்திலில்லை. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே 10:2).  ஆராதனைக்குரியவைகளில் அறியாமல் ஆராதிக்கிறவைகளை அகற்றிவிடுவோம் (அப். 17:23). தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? (2கொரி. 6:16). வீணானவைகளைப் பின்பற்றினால், நம்மையும் அது வீணராகவே மாற்றிவிடும் (2இராஜா. 17:15).   





Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க