முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள் பாடலில், 'you look like a monkey' என்று பாடுவது தவறா?

 

பிறந்தநாள் பாடலில்,

'you look like a monkey' என்று பாடுவது தவறா?



சத்துரு யுக்தியாய் விதைக்கும் சில காரியங்களை ஆவிக்குரிய புத்தியிருந்தால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும். மனிதன் எங்கிருந்து வந்தான்? என்ற கேள்வியையே இன்றும் உலகம் கேட்டுக்கொண்டிருக்கிறது? அத்தகைய ஆராய்ச்சியினை மேற்கொள்ளுவொரை விஞ்ஞானிகள் என்றும், அதைக்குறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானம் என்றும் இன்றைய உலகு வரையறுக்கிறது. எங்கிருந்து வந்தான் மனிதன்? என்ற இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல், இங்கிருந்து வந்தான் என்று எதையோ சுட்டிக்காட்டுவது, புத்திக்கெட்டதற்குத்தான் சமானம். 'மனிதன் குரங்கிலிருந்து வந்தான்' என்று மனிதர்களே மனிதர்களை ஏமாற்றிக்கொள்கின்றனர். என்ற தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒரு பிள்ளையிடம், 'உனது அப்பா யார்?' என்று கேட்கும்போது, அக்குழந்தை, தனக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் நாயைக் காட்டினால் எப்படியிருக்கும். தேவன், நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி 1:26,27). இந்த சத்தியத்தை, மனிதனின் புத்தியிலிருந்து எடுத்துப்போட பிசாசு எடுக்கும் முயற்சிகள்தான் எத்தனை எத்தனை. அதற்கான ஒரு திட்டமே பிறந்தநாள் பாடல் தடம்மாறிப்போனது.

Happy birthday to you (2)
Happy birthday dear ......
Happy birthday to you
May God bless you dear (2)
May God bless you dear .....
Happy birthday to you

இதுதான் உண்மையான பிறந்தநாள் பாடல், ஆனால் சத்துருவோ இதனுடன்

You born in a zoo (2)
You look like a Monkey
Happy birthday to you

என்பது எதை வெளிக்காட்டுகின்றது? 'நீ மிருகக்காட்சிசாலையில் பிறந்திருக்கிறாய், நீ குரங்கைப்போலிருக்கிறாய்' என்றுதானே. அப்படிப்பாடுவது சந்தோஷமானது அல்ல, சாபமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைப்போன்றதே, ‘April fool’ என்ற திட்டமும். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44). பிதாவின் பிள்ளைகளாகிய நம்மை, வருடத்தில் ஒருநாளாவது அவனுடைய பிள்ளைகள் என்று உரிமைபாராட்டிக்கொள்வதற்கு அவன் வைத்த திட்டம் இது. இதற்கு விலைபோய்விடவேண்டாம். நாம் தேவனுடைய ரூபத்தின்படி, தேவ சாயலின்படி உண்டாக்கப்பட்டவர்கள் என்பதில் உறுதியாயிருங்கள். சில கிறிஸ்தவ வீடுகளிலும், ஊழியர்களின் வீடுகளிலும் கூட பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது இப்படி பாடுவதைக் கேட்டு வேதனையடைந்திருக்கிறேன். 'அவரை அறியேன்' என்று பேதுரு மறுதலித்ததுபோல, மறுதலிக்கவேண்டாம். 'அவருடைய பிள்ளைகள்' என்ற ஸ்தானத்தை பிசாசு பறிக்கவிடாதிருங்கள். 'யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை' (யோபு 2:10) என்பதே நமக்கு முன் நிற்கும் மாதிரி. எனவே சங்கீதக்காரனும், 'பொய் உதடுகளுக்கு என்னைத் தப்புவியும்' என்று ஜெபிக்கிறான் (சங். 120:2). பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் (நீதி. 12:22), உதடுகள் அருவருப்பாகிவிட்டால், 'உதடுகளின் காளைகளை நம்மால் செலுத்த முடியுமோ?' (ஓசியா 14:2). 'பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல' (எண். 23:19) எனவே, ஒருவருக்கொருவர் பொய்சொல்லாமலும் இருங்கள் (லேவி 19:11) என்பதுதான் நமது பிதா நமக்குத் தந்த கட்டளை. நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (லேவி. 11:45) என்பதுதான் நமக்கு விடுக்கப்பட்ட கற்பனை; இந்தக் கற்பலகையினை உடைத்துவிட்டு, கன்றுக்குட்டியையோ, குரங்கையோ உண்டாக்கிவிடாதிருங்கள்.

இயேசு அப்பா பிள்ளைங்களெல்லாம் பொய்ச் சொல்லலாமா? (3)
சொல்லக்கூடாது - என்ற சிறுவயதின்போது நான் கற்ற பாடல்தான் இன்றும் எனது பாடம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறுதி நாளும், இரண்டு சொல்லும்

  நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கண்டு நாம் சும்மா இருந்துவிடலாகாது, சத்தியத்துடன் அதைச் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், சமையம் நெருங்கிவிட்டது என்ற சத்தம் அவைகளில் ஒலிப்பதையும், இது கடைசிக்காலம் என்பது அந்த ஒலிக்குள் ஒளிந்திருப்பதையும் ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.  'ஆதார்' என்றால் இன்று அறியாதோர் எவருமில்லை. 'ஆதார்' என்றால் ஓர் மனிதனைக் குறித்த ஆதாரம் என்றே நாம் சொல்லிக்கொண்டாலும், 'ஆதார்' என்ற சொல்லின் அடுத்த பக்கமும் நம் அறிவுக்கு அவசியம். ஆபீப் என்னும் மாதத்தில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் ஜனத்தை விடுதலையாக்கிக் கொண்டுவந்தார் கர்த்தர். இதனை, தலைமுறை தலைமுறையாக நினைவுகூறும் வண்ணம், அதனையே வருடத்தின் முதல் மாதமாகவும் குறித்தார்; அதுவே புதுவருடம், 'ஆண்டவரின் ஆணைப்படி, எகிப்திலிருந்து (பாவத்திலிருந்து) விடுதலையாகாதவர்களுக்கு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு இல்லை என்பது அதன் உள்ளர்த்தம்' ஆபீப் மாதத்தைத் தொடர்ந்தே பிற மாதங்கள் கணக்கிடப்பட்டன. எனினும், இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்டபோது, அவர்களின் ...

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         பிரியமானவர்களே!  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை'...

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செ...