Skip to main content

சினிமா பார்ப்பது தவறா?

 



விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை அழிவிற்கான ஆயுதங்களாக உபயோகப்படுத்தி தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது தற்கால மனிதர்களிடத்தில் காணப்படும் தவிர்க்கமுடியாத குணம். ஆக்கத்திற்காக உபயோகப்படுத்தப்படவேண்டிய அணுசக்தியை அழிவிற்காக கையில் வைத்திருக்கின்றன பல நாடுகள். ஏன் கண்டுபிடிக்கப்பட்டது? எப்படி உபயோகப்படுத்தவேண்டும்? எதற்காக உபயோகப்படுத்தப்படவேண்டும்? என்ற பிரதான கேள்விகளை பின்னுக்குத் தள்ளிவிட்டதே அதற்குக் காரணம். அவ்வாறே, மனிதர்களின் மனத்திரையினைக் கறையாக்க சத்துரு பல திரைகளை உபயோகப்படுத்துகின்றான். திரையரங்குகளோ, தொலைக்காட்சிகளோ, இன்டெர்நெட்டோ, செல்போன்களோ அனைத்தும் மனிதர்களுக்கு பயன்தரக்கூடியவைகளே. எனினும், அதன் பயன்பாட்டிலிருந்து பாதை மாறும்போதோ பயனற்றவைகளாக மாறிவிடுகின்றன. சினிமா என்ற அரங்கத்திலிருந்த மனிதர்களை, தொலைக்காட்சி என்ற வீட்டிற்குள்ளும் இன்டெர்நெட் என்ற குட்டி அறைக்குள்ளும் சுருக்கி, செல்போன் என்ற கையடக்கக் கருவிக்குள் அடக்கிவிட்டது இன்றைய விஞ்ஞான உலகு.

வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்படும் இன்றைய சினிமாக்கள், ஜனங்களைக் கவர்ந்திழுக்கும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. விரசங்களை விலக்கிவிட்டால் தங்கள் தயாரிப்புகள் விலைபோகாது என்பதை அறிந்த வர்த்தகர்களே இன்றைய தயாரிப்பாளர்கள். ஆபாசக் காட்சிகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று தொலைக்காட்சி நேர்முகப் பேட்டியில் இயக்குநர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, 'அது, சோற்றுடன் நாய்க்குக் கொடுக்கப்படும் குட்டி எலும்பைப் போன்றதே' என்று சாதுரியமாகப் பதிலளித்தார். 'செத்த ஈக்கள் தைலைக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக்கெட்டுப்போகப்பண்ணும்' (பிர. 10:1) என்கிறதே வேதம்; அப்படியிருக்க, எலும்பைக் குறித்து மட்டும் ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள், சோற்றைக் குறித்துப் பேசுங்கள்; என்று சொல்லுவது அறிவில்லாத அறிவுரையே. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று (மத் 5:28) என்று போதித்தார் இயேசு. காதலையே மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் உன் நெஞ்சில் காமத்தையே தூண்டிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு 31:1) என்ற கேள்வியுடன் தன்னைக் காத்துக்கொண்டான் யோபு. ஒருபுறம் விபச்சாரத்தை விரும்பும் கூட்டம், மற்றொருபுறம் வன்முறையை (சண்டைக் காட்சிகளை) விரும்பும் கூட்டம்; இந்த இரு பெருங் கூட்டத்தினரை தன்பக்கம் இழுத்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்றைய சினிமாத் துறை.

மற்றொருபுறம், 'சினிமா பார்க்கிறது தவறு' என்று அடித்துப்பேசுபவர்களும், திரையரங்குகளுக்குப் போகாததவர்களுமான கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் ஒருபகுதியினர், அறைவீட்டில் அமர்ந்து தொலைக்காட்சித் திரையில் தொடர்களைப் பார்த்துக்கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நேரம், கவனம், உணர்வு என உங்களுடைய அத்தனையையும் உங்களிடமிருந்து திருடிக்கொள்ள சத்துரு செய்யும் சதி இது. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது (மத் 6:24). இந்த நிலைதான் சினிமாவுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் அடிமையானோர் வாழ்க்கையில் உண்டாகும். உன் சரீரத்தின் பெலவீனத்தை நோக்கி வீசப்படும் அம்புகளாகவே சினிமாவின் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. உன் பெலவினங்களை அவை மேலும் பெரிதாக்கும். ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும் (மத் 9:16). ஒருபுறம் கோடி வஸ்திரத்தையும் (இரட்சிக்கப்பட்ட வஸ்திரத்தையும்) மறுபுறம் பழந்துணியையும் (பழைய வாழ்க்கையையும்) வைத்துக்கொண்டிருந்தால், வாழ்க்கை கிழிந்துபோகும்; அதற்கான காரணத்தை நீங்களே ஏற்கவேண்டியதாகிவிடும். சினிமா உன்னை கறையாக்கும், இயேசுவின் இரத்தம் கறை நீக்கும். ஒவ்வொரு சினிமாக்களும் 'விக்கிரக பூஜைகளுக்குப் பின்பே' ஒவ்வொரு சினிமாக்களும் எடுக்கப்படுகின்றன; என்ற இந்த ஒரு அறிவே திரையரங்கு வாசலுக்குள் செல்லாமல் உன்னைத் தடுத்து நிறுத்தப் போதுமானது. 


Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க